சபதங்களால் என் நரம்புகள் கட்டி ...!
&
சபதங்களால் என் நரம்புகளைக் கட்டிப்போட்டு
சப்தமின்றி தினமும் படுக்கையில் வீழ்கிறேன் -
நாளை முதல் மௌனம் காப்பேன்;
வீணாய் வார்த்தைகளுள் சிக்கி வதைப்படேன்;
அழையாத கருத்துக்களை விழைந்து சொல்லேன்;
என் அருமைகளை இவர்களுக்குப் புரிய வைப்பேன் --
விடிந்தபின் விளைவதோ சொல்லக் கேவலம்
மௌனத்தாலும் மாட்டிக் கொள்கிறேன்
மௌனத்திற்குத்தான் இத்தனை வாய்களோ !
வாய் சிந்தி இருந்தால் கூட ஒரு வலிதான்-
மௌனத்தின் ரணங்களோ இடிகளின் கடிகளாய்--
இன்றும் என்றும் உறுதி மொழிகளால் நரம்பினை இறுக்கி
மஞ்சம் வீழ்ந்து மறுபடி வலிகளில் உளைவேன் !
மாறா இதுவே என் கதை என்பேன் !
--சந்திர கலாதர்
No comments:
Post a Comment