Saturday, November 12, 2011

binding myself with promises

சபதங்களால் என் நரம்புகள் கட்டி ...!



&



சபதங்களால் என் நரம்புகளைக் கட்டிப்போட்டு

சப்தமின்றி தினமும் படுக்கையில் வீழ்கிறேன் -

நாளை முதல் மௌனம் காப்பேன்;

வீணாய் வார்த்தைகளுள் சிக்கி வதைப்படேன்;

அழையாத கருத்துக்களை விழைந்து சொல்லேன்;

என் அருமைகளை இவர்களுக்குப் புரிய வைப்பேன் --

விடிந்தபின் விளைவதோ சொல்லக் கேவலம்

மௌனத்தாலும் மாட்டிக் கொள்கிறேன்

மௌனத்திற்குத்தான் இத்தனை வாய்களோ !

வாய் சிந்தி இருந்தால் கூட ஒரு வலிதான்-

மௌனத்தின் ரணங்களோ இடிகளின் கடிகளாய்--

இன்றும் என்றும் உறுதி மொழிகளால் நரம்பினை இறுக்கி

மஞ்சம் வீழ்ந்து மறுபடி வலிகளில் உளைவேன் !

மாறா இதுவே என் கதை என்பேன் !





--சந்திர கலாதர்

No comments:

Post a Comment