Monday, December 5, 2011

வயதாகிப்போனால்
 
&
 
வயதாகிப் போச்சு
 
இதயம் திறக்கத் தயக்கமாகிறது -
 
ரத்த பந்தங்கள் உராய்வு கொள்ளுமோ ?
 
என் எழுத்துக்கள் பாராட்டுப் பெறுகின்றன -
 
ஆனால் பந்தங்கள் மனதில் அவையே
 
எப்படித் தீப்பந்தங்களாக வீழ்கின்றன ?
 
எழுத்துக்கள் ஒருவேளை
 
அவர் விழி நுழைகையில் இடம் மாறி அமர்ந்து
 
எதிரான அர்த்தங்கள் எழுப்புகின்றனவோ?
 
ஸ்படிகமான என் மொழிகளில்
 
பின் எப்படிக் களங்கம் கரைந்து கொள்கிறது ?
 
கட்டுப்பாடுகளில் இறுகிப்போன எனக்கு
 
இவர்கள் நடத்தைகள் அனைத்துமே
 
தறிகெட்டுத் திரிவதாய்
 
வெறி கொண்டு அலைவதாய்
 
எங்கோ மோதிச் சிதறப் போவதாய்--
 
பதட்டமாய் மனம் பின் தொடர்கிறேன்
 
ஆனால் வாய் மூடி மௌனியாய் !
 
ஆம் ,வயோதிகம் வேறென்ன செய்யக்கூடும் ?
 
 
 
-------சந்திர கலாதர்

No comments:

Post a Comment