Friday, November 4, 2011

a joyful flowery drizzle

மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது

[ஒரு அனுபவம் ]

&

மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது

குடை கறுமை எதிர்ப்பை விடைக்கிறது-

ஒரு சிறுமி துள்ளலாய்ச் சிலிர்க்கிறாள்;

மழை அவளோடு இணைந்து ஆனந்திக்கிறது-

குடையின் எட்டு முதுகெலும்புகளில் சரிந்து

எட்டு வாய்களில் என்னைத் திட்டித் தீர்க்கிறது

கால் உடுப்புகளைக் கோபத்தில் கடிக்கிறது;

"முட்டாளே ! உனக்கு வயதாகி விட்டது !" என

என் குடையை என் மண்டையாக்கி குத்துகிறது !

ஒட்டிய உடையும் ஓங்கும் குஷியுமாய்ச் சிறுமி

குடையின் தோல்வியில் ஊறிய ஆப்பமாய் நான் !



------சந்திர கலாதர்

No comments:

Post a Comment