மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது
[ஒரு அனுபவம் ]
&
மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது
குடை கறுமை எதிர்ப்பை விடைக்கிறது-
ஒரு சிறுமி துள்ளலாய்ச் சிலிர்க்கிறாள்;
மழை அவளோடு இணைந்து ஆனந்திக்கிறது-
குடையின் எட்டு முதுகெலும்புகளில் சரிந்து
எட்டு வாய்களில் என்னைத் திட்டித் தீர்க்கிறது
கால் உடுப்புகளைக் கோபத்தில் கடிக்கிறது;
"முட்டாளே ! உனக்கு வயதாகி விட்டது !" என
என் குடையை என் மண்டையாக்கி குத்துகிறது !
ஒட்டிய உடையும் ஓங்கும் குஷியுமாய்ச் சிறுமி
குடையின் தோல்வியில் ஊறிய ஆப்பமாய் நான் !
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment