Wednesday, March 21, 2012

இத்தனை மலர்கள் பார்க்கிறேன்

பெயர்கள் சிலதே தெரிகிறேன் -

அவமானமாய்ச் சிறுக்கிறேன் ;

எத்தனை மரங்கள் கடக்கிறேன்

நான்கைந்தே அறிகிறேன் -

வெட்கித் தலை வெட்டுகிறேன் ;

விண்ணில் முறைக்கும் விண்மீன்கள்

பாட்டில் மலரும் பறவைகள் என

இன்னும் எத்தனை எத்தனையோ

ஒன்றையும் கைப்பிடி அறியாமல்

அகம்பாவத்தில் அலம்புகிறேன் -

எங்கோ ஒருவன்  சிரிக்கின்றான்

எனக்கது மட்டும் கேட்கவில்லை !!


-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment