பல எளியோரைப் பார்க்கிறேன்
கிராமங்களில் சாலை ஓரங்களில் -
தனிச்சிறப்பு இல்லாத வாழ்வில்
எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி
எதிர் நீச்சல் முயற்சி இன்றி
கனவுகள் சுமக்காத கண்கள்
பெரும் திட்டங்கள் புனையாத போக்கில்
ஏதோ ஒரு தொழிலில் இயல்பாய்
பரபரப்பில்லா மௌன இயக்கத்தில் --
நகரத்தின் ஆசைகள்,சதிகள்.
ஓட்டங்கள் ஒட்டாத சிற்றோடையாய் --
வாழ்வின் மென்மையான நடனம்
வியர்க்காத மன அரங்கில்--
சிறுபுல் ஆலமர ஆசைகொள்வதில்லை
பசுமைப் பரவலில் நிறை கொள்கிறது --
பொறாமை நோய்களும் இல்லை ;
பொறுமையின் நிதான மலர்வாய் ;
உலகே நீ அழகுறுவது இதனாற் தானோ !
-----சந்திர கலாதர்

No comments:
Post a Comment