Thursday, March 8, 2012

பல எளியோரைப் பார்க்கிறேன்
 
கிராமங்களில் சாலை ஓரங்களில் -
 
தனிச்சிறப்பு இல்லாத வாழ்வில்
 
எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி
 
எதிர் நீச்சல் முயற்சி இன்றி
 
கனவுகள் சுமக்காத கண்கள்
 
பெரும் திட்டங்கள் புனையாத போக்கில்
 
ஏதோ ஒரு தொழிலில் இயல்பாய்
 
பரபரப்பில்லா மௌன இயக்கத்தில் --
 
நகரத்தின் ஆசைகள்,சதிகள்.
 
ஓட்டங்கள் ஒட்டாத சிற்றோடையாய் --
 
வாழ்வின் மென்மையான நடனம்
 
வியர்க்காத மன அரங்கில்--
 
சிறுபுல் ஆலமர ஆசைகொள்வதில்லை
 
பசுமைப் பரவலில் நிறை கொள்கிறது --
 
பொறாமை நோய்களும் இல்லை ;
 
பொறுமையின் நிதான மலர்வாய் ;
 
உலகே நீ அழகுறுவது இதனாற் தானோ !
 
 
 
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment