சபதங்களால் என் நரம்புகள் கட்டி ...!
&
சபதங்களால் என் நரம்புகளைக் கட்டிப்போட்டு
சப்தமின்றி தினமும் படுக்கையில் வீழ்கிறேன் -
நாளை முதல் மௌனம் காப்பேன்;
வீணாய் வார்த்தைகளுள் சிக்கி வதைப்படேன்;
அழையாத கருத்துக்களை விழைந்து சொல்லேன்;
என் அருமைகளை இவர்களுக்குப் புரிய வைப்பேன் --
விடிந்தபின் விளைவதோ சொல்லக் கேவலம்
மௌனத்தாலும் மாட்டிக் கொள்கிறேன்
மௌனத்திற்குத்தான் இத்தனை வாய்களோ !
வாய் சிந்தி இருந்தால் கூட ஒரு வலிதான்-
மௌனத்தின் ரணங்களோ இடிகளின் கடிகளாய்--
இன்றும் என்றும் உறுதி மொழிகளால் நரம்பினை இறுக்கி
மஞ்சம் வீழ்ந்து மறுபடி வலிகளில் உளைவேன் !
மாறா இதுவே என் கதை என்பேன் !
--சந்திர கலாதர்
Saturday, November 12, 2011
Wednesday, November 9, 2011
what life is this old age ?
போதும் இந்தப் புழுங்கும் முதுமை
&
வயோதிகம் ஆசைகளை உதிர்க்கிறது -
வாழ்வுக் காற்றில் வலிகளை முனகுகிறது
மொழிகளில் விரக்தி முட்கள் குத்துகின்றன
அனுபவங்கள் மட்டுமே சல்லி வேர்களாய்க் கேட்பாரின்றி -
இன்ப வடிதல்களில் துன்ப வெம்மைகளில்
வற்றிய வண்டல் படுகைகளாய் வயதின் சோர்வு ரேகைகள் -
தாண்டிய கால்கள் தரையை நக்கி நகரும் சப்பிய பாதங்களாய்-
வாழவும் தெரியாமல் தரை இறங்கவும் முடியாத
அந்தர ஆலம் விழுதுகளாய் என்ன வாழ்வு இது ?
பேசவும் முடியாமல் கேட்கவும் தாளாமல்
பார்க்கவும் கூடாமல் அடக்கவும் அடங்காமல் --
போதும் இந்தப் புழுங்கும் முதுமை
தனக்குள் அழுகும் இந்த நிலைமை !
---சந்திர கலாதர்
&
வயோதிகம் ஆசைகளை உதிர்க்கிறது -
வாழ்வுக் காற்றில் வலிகளை முனகுகிறது
மொழிகளில் விரக்தி முட்கள் குத்துகின்றன
அனுபவங்கள் மட்டுமே சல்லி வேர்களாய்க் கேட்பாரின்றி -
இன்ப வடிதல்களில் துன்ப வெம்மைகளில்
வற்றிய வண்டல் படுகைகளாய் வயதின் சோர்வு ரேகைகள் -
தாண்டிய கால்கள் தரையை நக்கி நகரும் சப்பிய பாதங்களாய்-
வாழவும் தெரியாமல் தரை இறங்கவும் முடியாத
அந்தர ஆலம் விழுதுகளாய் என்ன வாழ்வு இது ?
பேசவும் முடியாமல் கேட்கவும் தாளாமல்
பார்க்கவும் கூடாமல் அடக்கவும் அடங்காமல் --
போதும் இந்தப் புழுங்கும் முதுமை
தனக்குள் அழுகும் இந்த நிலைமை !
---சந்திர கலாதர்
Friday, November 4, 2011
a joyful flowery drizzle
மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது
[ஒரு அனுபவம் ]
&
மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது
குடை கறுமை எதிர்ப்பை விடைக்கிறது-
ஒரு சிறுமி துள்ளலாய்ச் சிலிர்க்கிறாள்;
மழை அவளோடு இணைந்து ஆனந்திக்கிறது-
குடையின் எட்டு முதுகெலும்புகளில் சரிந்து
எட்டு வாய்களில் என்னைத் திட்டித் தீர்க்கிறது
கால் உடுப்புகளைக் கோபத்தில் கடிக்கிறது;
"முட்டாளே ! உனக்கு வயதாகி விட்டது !" என
என் குடையை என் மண்டையாக்கி குத்துகிறது !
ஒட்டிய உடையும் ஓங்கும் குஷியுமாய்ச் சிறுமி
குடையின் தோல்வியில் ஊறிய ஆப்பமாய் நான் !
------சந்திர கலாதர்
[ஒரு அனுபவம் ]
&
மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது
குடை கறுமை எதிர்ப்பை விடைக்கிறது-
ஒரு சிறுமி துள்ளலாய்ச் சிலிர்க்கிறாள்;
மழை அவளோடு இணைந்து ஆனந்திக்கிறது-
குடையின் எட்டு முதுகெலும்புகளில் சரிந்து
எட்டு வாய்களில் என்னைத் திட்டித் தீர்க்கிறது
கால் உடுப்புகளைக் கோபத்தில் கடிக்கிறது;
"முட்டாளே ! உனக்கு வயதாகி விட்டது !" என
என் குடையை என் மண்டையாக்கி குத்துகிறது !
ஒட்டிய உடையும் ஓங்கும் குஷியுமாய்ச் சிறுமி
குடையின் தோல்வியில் ஊறிய ஆப்பமாய் நான் !
------சந்திர கலாதர்
Thursday, November 3, 2011
I WITHER KNOWING NOT THE ANSWER, MOM !
விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !
&
அம்மா கட்டிலில் நாட்பட்ட நோயாளியாக
தொண்ணூறைத் தொட்டுவிட்ட நிலையில் -
எதிரில் மௌனப் பிரதிமையாய் நான்-
என்னுள் பாசப் பிரவாகங்கள் எழுந்து
உதட்டுக் கதவங்களில் மோதி உடைகின்றன-
தாயின் விழி அலைகளைச் சந்திக்கும் திராணி அற்றவனாய் -
எண்ணிலா ஆர்வக் கேள்விகள் கொக்கிகளாய்க் கண்களில் -
பல்லாயிரம் பாச வினவுதல்கள் வரிசையிட்டு விழிகளில் -
தாயால் கேட்கவோ என்னால் விடையிடவோ முடியாத தவிப்புகள் -
எதற்குப் பின் நீ வந்தனை தாயின் முன் தூரங்கள் கரைத்து ?
தாயே ! எதற்கும் என்னிடம் சரியான விடையில்லையே என் செய்வேன் ?
உன் மௌனம் முகிழ்க்கின்ற வினாக்கள் அனைத்தும்
என் நலமே சார்ந்தவை என்று அறியாதவனா நான் ?
மகனின் தயக்கங்கள் அறியாத தாயும் அல்லவே நீயும் !
உன் முன் பொய் சொல்லத் திராணியில்லை என்பதால் மௌனம் காக்கிறேன் -
அம்மா ,இம் மௌனக் கரைதலில் கண்களின் கசிவில்
எத்தனையோ சேதிப் பரிமாற்றங்கள் ! பாத வீழ்தல்கள்-
ஆசி இறக்கங்கள் ! அன்புத் தழுவல்கள் !மன்னிப்பு மகிமைகள் !
எந்தத் தகுதியில் நான் உன்னுள் ஜனித்தேன் ?
விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !
------சந்திர கலாதர்
&
அம்மா கட்டிலில் நாட்பட்ட நோயாளியாக
தொண்ணூறைத் தொட்டுவிட்ட நிலையில் -
எதிரில் மௌனப் பிரதிமையாய் நான்-
என்னுள் பாசப் பிரவாகங்கள் எழுந்து
உதட்டுக் கதவங்களில் மோதி உடைகின்றன-
தாயின் விழி அலைகளைச் சந்திக்கும் திராணி அற்றவனாய் -
எண்ணிலா ஆர்வக் கேள்விகள் கொக்கிகளாய்க் கண்களில் -
பல்லாயிரம் பாச வினவுதல்கள் வரிசையிட்டு விழிகளில் -
தாயால் கேட்கவோ என்னால் விடையிடவோ முடியாத தவிப்புகள் -
எதற்குப் பின் நீ வந்தனை தாயின் முன் தூரங்கள் கரைத்து ?
தாயே ! எதற்கும் என்னிடம் சரியான விடையில்லையே என் செய்வேன் ?
உன் மௌனம் முகிழ்க்கின்ற வினாக்கள் அனைத்தும்
என் நலமே சார்ந்தவை என்று அறியாதவனா நான் ?
மகனின் தயக்கங்கள் அறியாத தாயும் அல்லவே நீயும் !
உன் முன் பொய் சொல்லத் திராணியில்லை என்பதால் மௌனம் காக்கிறேன் -
அம்மா ,இம் மௌனக் கரைதலில் கண்களின் கசிவில்
எத்தனையோ சேதிப் பரிமாற்றங்கள் ! பாத வீழ்தல்கள்-
ஆசி இறக்கங்கள் ! அன்புத் தழுவல்கள் !மன்னிப்பு மகிமைகள் !
எந்தத் தகுதியில் நான் உன்னுள் ஜனித்தேன் ?
விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !
------சந்திர கலாதர்
Wednesday, November 2, 2011
i exist amidst a thick overgrowth of luxury
i exist amidst a thick overgrowth of luxury
&
i exist amidst a thick overgrowth of luxury
and a dense undergrowth of affluence-
i can touch,feel and gape in wonder
but i have no rights at all to enjoyment-
yes,i am a slave girl born to toil and clean;
showered in abuses and punishment
with restless bones and sleepless eyes-
my dreams too scare me to death-
and in the palatial houses with hundred doors
i have no gates open for me to breathe my free air-
i could feel the stench of prosperity and gold
suffocating me to death and hell-
o how i wish to cry my heart out to a real dear soul-
god, grant me the penniless life of a poor
to kiss the dust of my distant earth
shouting my joy of a carefree pastoral bliss !
-----s.chandra kalaadhar
&
i exist amidst a thick overgrowth of luxury
and a dense undergrowth of affluence-
i can touch,feel and gape in wonder
but i have no rights at all to enjoyment-
yes,i am a slave girl born to toil and clean;
showered in abuses and punishment
with restless bones and sleepless eyes-
my dreams too scare me to death-
and in the palatial houses with hundred doors
i have no gates open for me to breathe my free air-
i could feel the stench of prosperity and gold
suffocating me to death and hell-
o how i wish to cry my heart out to a real dear soul-
god, grant me the penniless life of a poor
to kiss the dust of my distant earth
shouting my joy of a carefree pastoral bliss !
-----s.chandra kalaadhar
Subscribe to:
Comments (Atom)